--------------------------தீபச்செல்வன்
________________________________________
------------------------------------------------------------------
முகாரி ராகம்
கேட்கிறது..
கேட்கிறது..
இங்கே
மாமிச பிண்டங்களின்மீது
நடந்து கொண்டு
அவைகள்.....
எங்கும் இரத்த
ஆறு பாய்கிறது
எங்கள் உடலங்கள்
சிதைந்து
விதைந்து கிடக்கின்றன.
எஞ்சிய உயிர்கள்
போகுமிடம்
அறியாது
பொதிகளை சுமந்தபடி
போகின்றன
மாமிச பிண்டங்களின்மீது
நடந்து கொண்டு
அவைகள்.....
எங்கும் இரத்த
ஆறு பாய்கிறது
எங்கள் உடலங்கள்
சிதைந்து
விதைந்து கிடக்கின்றன.
எஞ்சிய உயிர்கள்
போகுமிடம்
அறியாது
பொதிகளை சுமந்தபடி
போகின்றன
நிர்வாணமாய்
துடிக்கிறது நெஞ்சம்.
துடிக்கிறது நெஞ்சம்.
பருந்துகள்
இதைப்பார்த்து
வருந்தவில்லை
மாறாக அருந்துகிறது
எங்கள் சடலங்களை
எங்கள் துயரங்களை
எங்கள்
வருந்தவில்லை
மாறாக அருந்துகிறது
எங்கள் சடலங்களை
எங்கள் துயரங்களை
எங்கள்
முகாரி ராகத்திற்கு
அவைகள் முகமகிழ்ந்து
கூத்தாடுகிறது.
எங்கள் துயரங்களை
மாலையாகப்
போட்டுக்கொண்டு
எங்கள் மரணங்களை
சலங்கையாக
கட்டிக்கொண்டு
அந்தப்பேய்கள்.
---------------------------------------------------------------------------------------
அவைகள் முகமகிழ்ந்து
கூத்தாடுகிறது.
எங்கள் துயரங்களை
மாலையாகப்
போட்டுக்கொண்டு
எங்கள் மரணங்களை
சலங்கையாக
கட்டிக்கொண்டு
அந்தப்பேய்கள்.
---------------------------------------------------------------------------------------
இந்தக் கவிதை 2004ஆம் ஆண்டு நான் முதலில் எழுதிய கவிதை ஆனால். 2005இல்தான் இது என் ஒருசில கவிதைகளுக்கு பிறகு பிரசுரமானது..
------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment