Thursday, December 27, 2007

காகத்தின் நிழலும் கிழிந்த பைகளும்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

மெலிந்த மனிதர்கள் மீது
காகங்கள் பறந்து
வற்றிக்கொண்டிருந்தன.

வாயிலிருக்கும்
மிகச்சிறிய வடையில்
ஆயிரம் இலையான்கள்
மொய்க்கின்றன.

கோப்பையில்
தேனீர் வற்றியிருக்க
மேசை வெளித்திருக்கிறது.

சோறு காய்ந்து
அழிந்து போயிருக்கும்
உணவுத்தட்டுக்களை
தெருநாய்கள்
காவிவந்து தின்கின்றன.

பழைய செய்தித்தாள்
ஒன்றில் கட்டப்பட்ட
ஒரு சோற்றுப் பார்சலை
ஜந்தாறு குழந்தைகள்
பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சோற்றுப்பானைகள்
ஓட்டையாய்ப்போயிருக்க
தேனீர்க்கோப்பைகள்
உடைந்து போயிருக்க
வீசப்பட்டிருந்தன.

கிழிந்த பைகளோடு
மனிதர்களை
ஏற்றிய ஒரு பேரூந்து
உள் வீதிகளுக்குள் அலைகிறது.

காகங்கள்
கூரைகளை தின்கின்றன.
-------------------------------------------

No comments: