
-----------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
ஜெபங்களின் மீது அழுகை எழுகிறது
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
ஜெபங்களின் மீது அழுகை எழுகிறது
ஜெபமாலைகளின் பேரணியில்
பைபிள்களை வாசித்தபடி
பைபிள்களை வாசித்தபடி
திருப்பாடல்களை பாடுகையில்
கொலைசெய்யப்பட்ட பறவைகள் வந்து போயின.
தேவாலயங்களைவிட்டு
வெளியில் வருகிறபோது
சிலுவையை சுமந்து திரிகிறதாய்
கடவுள் சொல்லுகிறார்.
வீட்டுக்கும்
தேவாலயத்திற்கும் இடையில்
பாடாய்
கிடக்கின்றன சிலுவைகள்.
ஆணிகள் அறையப்பட்ட
மனிதர்களின்
முகங்களில் வழிகிறது கடவுளின் இரத்தம்.
சபிக்கப்பட்ட வாழ்விலிருந்து
மீளுவதற்காய் ஜெபித்தீர்கள்
அழகிய தோட்டம் பற்றி கனவுடன்
அழைத்து வரப்பட்ட குழந்தைகள்
ஆலயத்தை சூழ
விளையாட ஏங்குகிறார்கள்
இந்த அழுகை வழியும்
ஜெபங்களில் சாத்தானுக்கு எதிராய்
சிலுவையுடன் செல்வதை நான் கண்டேன்.
------------------------------------------
21.09.2008
---------------------------------------
தேவாலயங்களைவிட்டு
வெளியில் வருகிறபோது
சிலுவையை சுமந்து திரிகிறதாய்
கடவுள் சொல்லுகிறார்.
வீட்டுக்கும்
தேவாலயத்திற்கும் இடையில்
பாடாய்
கிடக்கின்றன சிலுவைகள்.
ஆணிகள் அறையப்பட்ட
மனிதர்களின்
முகங்களில் வழிகிறது கடவுளின் இரத்தம்.
சபிக்கப்பட்ட வாழ்விலிருந்து
மீளுவதற்காய் ஜெபித்தீர்கள்
அழகிய தோட்டம் பற்றி கனவுடன்
அழைத்து வரப்பட்ட குழந்தைகள்
ஆலயத்தை சூழ
விளையாட ஏங்குகிறார்கள்
இந்த அழுகை வழியும்
ஜெபங்களில் சாத்தானுக்கு எதிராய்
சிலுவையுடன் செல்வதை நான் கண்டேன்.
------------------------------------------
21.09.2008
---------------------------------------
No comments:
Post a Comment